🔗

முஅத்தா மாலிக்: 238

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ: كَانَ يَرَى عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَتَرَبَّعُ فِي الصَّلَاةِ إِذَا جَلَسَ، قَالَ: فَفَعَلْتُهُ وَأَنَا يَوْمَئِذٍ حَدِيثُ السِّنِّ، فَنَهَانِي عَبْدُ اللَّهِ

وَقَالَ: «إِنَّمَا سُنَّةُ الصَّلَاةِ أَنْ تَنْصِبَ رِجْلَكَ الْيُمْنَى، وَتَثْنِيَ رِجْلَكَ الْيُسْرَى». فَقُلْتُ لَهُ: فَإِنَّكَ تَفْعَلُ ذَلِكَ. فَقَالَ: «إِنَّ رِجْلَيَّ لَا تَحْمِلَانِي»


238. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தொழுகையில் சம்மணமிட்டு அமர்ந்தார்கள். நானும் அவ்வாறே அமர்ந்தேன். அதுசமயம் நான் சிறுவனாக இருந்தேன். அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் (நான் அப்படி உட்கார) தடை செய்து விட்டு, ‘உனது வலது காலை நட்டு வைத்தும் கடது காலை வெளியாக்குவது தான் தொழுகையின் சுன்னத் என்று கூறினார்கள்.

அப்படியானால் நீங்கள் இப்படி அமர்ந்தீர்களே எனக் கேட்டேன். என் கால்கள் என்னை சுமக்க வலுவிழந்து போய் விட்டன. (எனவே சம்மணமிட்டேன்) என்று கூறினார்கள். இதை அவர்களின் மகன் உபைதுல்லாஹ் கூறுகிறார்கள்.