جَرْحُ الْعَجْمَاءِ جُبَارٌ، وَالْبِئْرُ جُبَارٌ، وَالْمَعْدِنُ جُبَارٌ، وَفِي الرِّكَازِ الْخُمُسُ.
قَالَ مَالِكٌ: وَتَفْسِيرُ الْجُبَارِ، أَنَّهُ لاَ دِيَةَ فِيهِ.
பாடம்:
நட்ட ஈடு-இழப்பீடு வழங்குதல்
2541. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கால்நடைகளால் ஏற்படும் காயங்களுக்கு இழப்பீடு கிடையாது;
(பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தும் தவறி விழுந்தால்) கிணறு (மற்றும்) சுரங்கங்களுக்கு இழப்பீடு கிடையாது;
புதையல்களில் ஐந்தில் ஒரு பங்கு (அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி) உண்டு.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
மாலிக் இமாம் கூறுகிறார்:
‘ஜுபார்’ (جبار) என்பதன் விளக்கம் என்னவென்றால், அதில் நட்டஈடு (தியத்) ஏதுமில்லை என்பதாகும்.