🔗

முஅத்தா மாலிக்: 2542

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

الْقَائِدُ وَالسَّائِقُ وَالرَّاكِبُ كُلُّهُمْ ضَامِنٌ لِمَا أَصَابَتِ الدَّابَّةُ، إِلاَّ أَنْ تَرْمَحَ الدَّابَّةُ مِنْ غَيْرِ أَنْ يُفْعَلَ بِهَا شَيْءٌ تَرْمَحُ لَهُ، وَقَدْ قَضَى عُمَرُ بْنُ الْخَطَّابِ فِي الَّذِي أَجْرَى فَرَسَهُ بِالْعَقْلِ.
قَالَ مَالِكٌ: فَالْقَائِدُ وَالرَّاكِبُ وَالسَّائِقُ أَحْرَى أَنْ يَغْرَمُوا مِنَ الَّذِي أَجْرَى فَرَسَهُ.


2542. மாலிக் இமாம் கூறுகிறார்:

“(கால்நடைகளை முன்னால் இருந்து) இழுத்துச் செல்பவர், பின்னால் இருந்து ஓட்டிச் செல்பவர், அதன் மீது ஏறிச் செல்பவர் ஆகிய அனைவரும் அந்த விலங்கு (மற்றவர்களுக்கு) ஏற்படுத்தும் சேதங்களுக்குப் பொறுப்பாளிகளாவர். (அதாவது அதற்கான நட்டஈட்டை அவர்கள் வழங்க வேண்டும்).

ஆனால், அந்த விலங்கு தூண்டப்படாத நிலையில், தானாகவே தனது கால்களால் உதைத்து அதனால் சேதம் ஏற்பட்டால் அதற்கு நட்டஈடு கிடையாது.

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், குதிரையை வேகமாக ஓட்டிச் சென்ற ஒருவருக்கு ‘அக்ல்-இழப்பீடு, இரத்தப்பணம்) வழங்குமாறு தீர்ப்பளித்துள்ளார்கள்.


மேலும் மாலிக் இமாம் கூறுகிறார்:

“குதிரையை கால்நடையாக நடத்திச் செல்பவரை விட அதை முன்னால் இருந்து வேகமாக இழுத்துச் செல்பவர், அதன் மீது ஏறிச் செல்பவர், அதை பின்னால் இருந்து வேகமாக ஓட்டிச் செல்பவர் ஆகியோர் (அவற்றால் ஏற்படும் சேதங்களுக்கு) அபராதம்-நட்டஈடு செலுத்த அதிகத் தகுதியுடையவர்கள்.