🔗

முஅத்தா மாலிக்: 27

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«إِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَإِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا عَنِ الصَّلَاةِ» وَقَالَ: ” اشْتَكَتِ النَّارُ إِلَى رَبِّهَا، فَقَالَتْ: يَا رَبِّ أَكَلَ بَعْضِي بَعْضًا، فَأَذِنَ لَهَا بِنَفَسَيْنِ فِي كُلِّ عَامٍ: نَفَسٍ فِي الشِّتَاءِ، وَنَفَسٍ فِي الصَّيْفِ


பாடம் 7

தொழுகையைத் தாமதப்படுத்துவது

27. வெப்பத்தின் கடுமை நரகத்தின் ஜுவாலையில் உள்ளதாகும். வெப்பம் கடுமையாகி விட்டால் தொழுகையைத் தாமதப்படுத்துங்கள். நரக நெருப்பு தன் இறைவனிடம், இறைவா! (கடும் வெப்பத்தினால்) என்னில் சில பகுதி, சில பகுதிகளைச் சாப்பிடுகிறது எனக் கூறி முறையிட்டது. உடனே அதற்கு ஒவ்வொரு வருடமும், கோடை காலத்தில் ஒரு மூச்சும், குளிர்காலத்தில் ஒரு மூச்சும் என இரு மூச்சுக்கள் விட்டுக் கொள்ள அனுமதியளித்தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அதாஉ இப்னு யஸார் கூறுகின்றார்கள்.