إِذَا أَحَبَّ اللهُ الْعَبْدَ، قَالَ لِجِبْرِيلَ: قَدْ أَحْبَبْتُ فُلاَنًا، فَأَحِبَّهُ، فَيُحِبُّهُ جِبْرِيلُ، ثُمَّ يُنَادِي فِي أَهْلِ السَّمَاءِ: إِنَّ اللهَ قَدْ أَحَبَّ فُلاَنًا، فَأَحِبُّوهُ، فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ، ثُمَّ يُوضَعُ لَهُ الْقَبُولُ فِي الأَرْضِ، وَإِذَا أَبْغَضَ اللهُ الْعَبْدَ.
2743. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு அடியானை அல்லாஹ் நேசிக்கும் பொழுது ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்!’ என்று கூறுவான். எனவே, ஜிப்ரீல் (அலை) அவர்கள் விண்ணகத்தில் வசிப்பவர்களிடம், ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான்; நீங்களும் அவரை நேசியுங்கள்’ என்று அறிவிப்பார்கள். உடனே, விண்ணக்கத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்கு பூமியிலும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.
ஒரு அடியானை அல்லாஹ் வெறுக்கும் பொழுது ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, ‘அல்லாஹ் இன்னாரை வெறுக்கிறான். எனவே, நீங்களும் அவரை வெறுங்கள்!’ என்று கூறுவான். எனவே, ஜிப்ரீல் (அலை) அவர்கள் விண்ணகத்தில் வசிப்பவர்களிடம், ‘அல்லாஹ் இன்னாரை வெறுக்கிறான்; நீங்களும் அவரை வெறுங்கள்!’ என்று அறிவிப்பார்கள். உடனே, விண்ணக்கத்தாரும் அவரை வெறுப்பார்கள். பிறகு அவருக்கு பூமியிலும் அந்நிலை ஏற்படுகிறது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
மாலிக் அவர்கள், “ஒரு அடியானை அல்லாஹ் வெறுக்கும் பொழுது” என்ற வாசகத்திற்கு முதல் பகுதியில் உள்ளது போன்றே ஸுஹைல் பின் அபூஸாலிஹ் கூறினார் என்று கருதுகிறேன் என்று கூறுகிறார்.