لَنْ يَبْقَى بَعْدِي مِنَ النُّبُوَّةِ إِلاَّ الْمُبَشِّرَاتُ، فَقَالُوا: وَمَا الْمُبَشِّرَاتُ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: الرُّؤْيَا الصَّالِحَةُ يَرَاهَا الرَّجُلُ الصَّالِحُ أَوْ تُرَى لَهُ، جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ.
2749. ‘நற்செய்தி கூறுகின்றவை (‘முபஷ்ஷிராத்’) தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் அல்லாஹ்வின் தூதரே! ‘நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன?’ என்று வினவினர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் நல்ல மனிதர் காணும், (அல்லது அவருக்கு காட்டப்படும்) நல்ல (உண்மையான) கனவு’ ஆகும். இது நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அதாஉ பின் யஸார் (ரஹ்)