قَالَ مَالِكٌ: فِي الَّذِي يَرْكَعُ رَكْعَةً مَعَ الإِمَامِ يَوْمَ الْجُمُعَةِ ثُمَّ يَرْعُفُ، فَيَخْرُجُ فَيَأْتِي وَقَدْ صَلَّى الإِمَامُ الرَّكْعَتَيْنِ كِلْتَيْهِمَا، أَنَّهُ يَبْنِي بِرَكْعَةٍ أُخْرَى مَا لَمْ يَتَكَلَّمْ.
283. ஜும்ஆ நாளில் இமாமுடன் ஒரு ரக்அத் தொழுதவருக்கு, பின்பு மூக்கில் ரத்தம் வந்து, உடனே வெளியேறி. இமாம் இரண்டு ரக்அத்தையும் தொழுது விட்டப்பின் வந்தால், அவர் பேசாமலிருந்தால் மற்றொரு ரக்அத்தை நிறைவேற்றுவார் என இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.