🔗

முஅத்தா மாலிக்: 2832

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

قِيلَ لِرَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: أَيَكُونُ الْمُؤْمِنُ جَبَانًا؟ فَقَالَ: نَعَمْ، فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ بَخِيلاً؟ فَقَالَ: نَعَمْ، فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ كَذَّابًا؟ فَقَالَ: لاَ.


2832. ஸஃப்வான் பின் ஸுலைம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு முஃமின் கோழையாக இருப்பானா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள். ஒரு முஃமின் கஞ்சனாக இருப்பானா? எனக் கேட்கப்பட்டது. அதற்கும் அவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள். ஒரு முஃமின் பொய் சொல்பவனாக இருப்பானா? எனக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் “இல்லை” என்று பதிலளித்தார்கள்.