جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَهُ عَنْ وَقْتِ صَلَاةِ الصُّبْحِ. قَالَ: فَسَكَتَ عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا كَانَ مِنَ الْغَدِ، صَلَّى الصُّبْحَ حِينَ طَلَعَ الْفَجْرُ، ثُمَّ صَلَّى الصُّبْحَ مِنَ الْغَدِ بَعْدَ أَنْ أَسْفَرَ. ثُمَّ قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنْ وَقْتِ الصَّلَاةِ؟» قَالَ: هَأَنَذَا يَا رَسُولَ اللَّهِ فَقَالَ: «مَا بَيْنَ هَذَيْنِ وَقْتٌ»
3. அதாஉ பின் யஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தார்கள். மறுநாள் ஃபஜ்ர் நேரம் உதயமானதும் ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். பின்பு (மறுநாள்) கிழக்கு வெளுத்தப் பின் (அதாவது நன்கு வெளிச்சம் ஆன பிறகு) ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள்.
பின்னர், “தொழுகையின் நேரம் பற்றிக் கேட்டவர் எங்கே?” என்று கேட்டார்கள். அவர், “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் இங்கே இருக்கிறேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “(நேற்றும் இன்றும் தொழ வைத்த) இந்த இரண்டு நேரங்களுக்கு இடைப்பட்ட நேரம் தான் (ஸுப்ஹுத் தொழுகையின்) நேரம்” என கூறினார்கள்.