🔗

முஅத்தா மாலிக்: 321

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

كُنْتُ أَسِيرُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بِطَرِيقِ مَكَّةَ، قَالَ سَعِيدٌ: فَلَمَّا خَشِيتُ الصُّبْحَ، نَزَلْتُ، فَأَوْتَرْتُ، ثُمَّ أَدْرَكْتُهُ. فَقَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: أَيْنَ كُنْتَ فَقُلْتُ لَهُ خَشِيتُ الصُّبْحَ، فَنَزَلْتُ، فَأَوْتَرْتُ، فَقَالَ عَبْدُ اللَّهِ: أَلَيْسَ لَكَ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ، فَقُلْتُ: بَلَى، وَاللَّهِ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يُوتِرُ عَلَى الْبَعِيرِ»


321. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களுடன் நான் (இரவில்) மக்காவிற்கு பயணம் செய்து கொண்டிருந்தேன். சுப்ஹு நேரத்தை அது வந்தால் வித்ருத் தவறி விடுமே எனப்பயந்து நான் (என் வாகனத்தில் இருந்து) இறங்கினேன், வித்ருத் தொழுதேன். பின்பு இப்னு உமர்(ரலி) அவர்களைப் போய்ச் சேர்ந்தேன். எங்கு சென்றீர்? என அப்துல்லா இப்னு உமர்(ரலி) என்னிடம் கேட்டார்கள். சுப்ஹு நேரத்தை பயந்து நான் (அங்கே) இறங்கி வித்ருத் தொழுதேன் என்று கூறினேன். நபி(ஸல்) அவாகளிடம் (இது விஷயத்தில்) அழகிய முன்மாதிரி இருக்கிறது உமக்குத் தொரியாதா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! தொரியாது’ என்றேன். நபி(ஸல்) அவர்கள் (பயணத்தின் போது) ஒட்டகத்திலேயே வித்ருத் தொழுவார்கள் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள் என்பதாக ஸயீத் இப்னு யஸார் கூறுகின்றார்கள்.