🔗

முஅத்தா மாலிக்: 350

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّ رَجُلًا سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ فَقَالَ: إِنِّي أُصَلِّي فِي بَيْتِي، ثُمَّ أُدْرِكُ الصَّلَاةَ مَعَ الْإِمَامِ، أَفَأُصَلِّي مَعَهُ؟ فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: «نَعَمْ». فَقَالَ الرَّجُلُ: أَيَّتَهُمَا أَجْعَلُ صَلَاتِي؟ فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ: «أَوَ ذَلِكَ إِلَيْكَ. إِنَّمَا ذَلِكَ إِلَى اللَّهِ يَجْعَلُ أَيَّتَهُمَا شَاءَ»


350. நான் என் வீட்டிலே தொழுது வருகிறேன். பின்பு இமாமுடன் தொழுகையை அடைந்து கொள்கின்றேன். அவருடன் சேர்ந்த நான் தொழ வேண்டுமா? என்று அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களிடம் ஒருவர் கேட்டார். தொழ வேண்டும் என பதில் கூறினார்கள். இந்த இரண்டு தொழுகை(களில்) எதை (பர்லான) என் தொழுகையாக ஆக்குவேன்? என அவர் கேட்டார். அந்த வேலை உனக்கு ஏன்? அது அல்லாஹ்வின் வேலையாகும். அவன் விரும்பியதை (பர்லாக) ஆக்குவான் என்று இப்னு உமர்(ரலி) கூறியதாக நாபிஉ கூறுகின்றார்கள்.