قُمْتُ وَرَاءَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فِي صَلَاةٍ مِنَ الصَّلَوَاتِ، وَلَيْسَ مَعَهُ أَحَدٌ غَيْرِي، «فَخَالَفَ عَبْدُ اللَّهِ بِيَدِهِ، فَجَعَلَنِي حِذَاءَهُ»
356. ஒரு தொழுகையின் போது அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களின் பின்னால் நான் நின்றேன். என்னைத் தவிர வேறு எவரும் அவர்களுடன் இல்லை. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தன் கையைப் பின்னோக்கி (என்னைப் பிடித்து) தன் வலது புறத்தில் நேராக என்னை ஆக்கினார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.