أَنَّهَا: «لَمْ تَرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي صَلَاةَ اللَّيْلِ قَاعِدًا قَطُّ، حَتَّى أَسَنَّ فَكَانَ يَقْرَأُ قَاعِدًا، حَتَّى إِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ، قَامَ فَقَرَأَ نَحْوًا مِنْ ثَلَاثِينَ أَوْ أَرْبَعِينَ آيَةً ثُمَّ رَكَعَ»
364. இரவுத் தொழுகையை நபி(ஸல்) அவர்ள் முதுமை அடையும் வரை அமர்ந்து தொழுததை நான் பார்த்ததே இல்லை. (முதுமை ஏற்பட்டதற்குப் பிறகு) உட்கார்ந்து கிராஅத் ஓதுவார்கள். பின்பு ருகூஉ செய்ய விரும்பினால் எழுந்து நின்று முப்பது அல்லது நாற்பது அளவுக்கு கிராஅத் ஓதுவார்கள். பின்பு ருகூஉ செய்வார்கள் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.