«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلْيَغْسِلْ يَدَهُ قَبْلَ أَنْ يُدْخِلَهَا فِي وَضُوئِهِ، فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ»
பாடம்: 10
தூங்கியவர், தொழத் தயாரானால் உளூச் செய்வது.
40. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் கையை உளூச் செய்யும் பாத்திரத்தில் விடுவதற்கு முன் (கைகளில் தண்ணீர் ஊற்றிக்) கழுவிக் கொள்ளட்டும். (ஏனெனில்) தூங்கும் போது தன் கை எங்கே சென்றது என்பதை அவர் அறிய மாட்டார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)