«مَنْ أَجْمَعَ إِقَامَةً أَرْبَعَ لَيَالٍ وَهُوَ مُسَافِرٌ، أَتَمَّ الصَّلَاةَ» قَالَ مَالِكٌ: «وَذَلِكَ أَحَبُّ مَا سَمِعْتُ إِلَيَّ»
பாடம் 90
சேர்ந்து (சில நாட்கள்) தங்கும் பயணி ‘கஸ்ர்” செய்யாமல் தொழுவது
402. ஒரு பயணி நான்கு இரவுகள் சேர்ந்து தங்க முடிவு செய்து விட்டால் அவன் தொழுகையை முழுமையாக்கட்டும் என ஸயீத் இப்னு முஸய்யப் கூறியதாக அதாஉ அல் ரோஸானீ அறிவிக்கின்றார்.
இது நான் கேட்டதில் எனக்கு விருப்பமானது என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.