رَأَيْتُ أَنَسَ بْنَ مَالِكٍ فِي السَّفَرِ وَهُوَ «يُصَلِّي عَلَى حِمَارٍ، وَهُوَ مُتَوَجِّهٌ إِلَى غَيْرِ الْقِبْلَةِ، يَرْكَعُ وَيَسْجُدُ، إِيمَاءً مِنْ غَيْرِ أَنْ يَضَعَ وَجْهَهُ عَلَى شَيْءٍ»
414. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் பிரயாணம் செய்யும் போது கழுதையின் மீதமர்ந்து கிப்லா அல்லாத திசை நோக்கித் தொழும் போது அவர்கள் லேசாக தலையை குனிவது மூலம் ருகூஉ வும், எப் பொருள் மீதும் நெற்றியை வைக்காமல் (தலையைச் சாய்த்து) ஸஜ்தாவும் செய்ததை நான் பார்த்தேன் என யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.