🔗

முஅத்தா மாலிக்: 426

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَقْبَلْتُ رَاكِبًا عَلَى أَتَانٍ وَأَنَا يَوْمَئِذٍ قَدْ نَاهَزْتُ الِاحْتِلَامَ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي لِلنَّاسِ، بِمِنًى «فَمَرَرْتُ بَيْنَ يَدَيْ بَعْضِ الصَّفِّ»، فَنَزَلْتُ، فَأَرْسَلْتُ الْأَتَانَ تَرْتَعُ، وَدَخَلْتُ فِي الصَّفِّ، فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَيَّ أَحَدٌ


பாடம் 96

தொழுபவனின் முன்னே நடந்து செல்ல அனுமதி

426. நான் பருவ வயதை நெருங்கிய காலத்தில், மினாவில் மக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழ வைக்கும் நிலையில் கழுதையின் மீது ஏறி நான் வந்து கொண்டிருந்தேன். ஸப்புகளுக்கு மத்தியில் குறுக்கே சென்று, பின்பு வாகனத்தில் இறங்கி கழுதையை மேய அனுப்பினேன். ஸஃபில் நுழைந்தேன். யாரும் எனக்கு ஆட்சேபணை தொரிவிக்கவில்லை என அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இதே கருத்து புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).