«الْمَلَائِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلَّاهُ الَّذِي صَلَّى فِيهِ، مَا لَمْ يُحْدِثْ. اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ»
قَالَ مَالِكٌ: ” لَا أَرَى قَوْلَهُ: مَا لَمْ يُحْدِثْ، إِلَّا الْإِحْدَاثَ الَّذِي يَنْقُضُ الْوُضُوءَ
பாடம் 103
தொழுகையை எதிர்பார்த்திருத்தல், அதற்காக நடந்து செல்லுதல்
441. எங்கே தொழுதாரோ அதே தொழுகை இடத்தில் ஒளு முறியாத நிலையில் அடுத்த தொழுகையை எதிர்பார்த்து இருப்பவருக்காக, ”இறைவா! அவரை மன்னிப்பாயாக! அவருக்கு அருள் புரிவாயாக!”” என மலக்குகள் துஆச் செய்வார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரி யில் இடம் பெற்றுள்ளது).
”ஒளு முறியாத வரை என்ற வார்த்தைக்கு, ஒளுவை முறிக்கும் காரியங்கள் தான்”” என்றே கருதுகிறேன் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.