«مَنْ غَدَا أَوْ رَاحَ إِلَى الْمَسْجِدِ، لَا يُرِيدُ غَيْرَهُ، لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ لِيُعَلِّمَهُ، ثُمَّ رَجَعَ إِلَى بَيْتِهِ، كَانَ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ، رَجَعَ غَانِمًا»
443. நல்லதைக் கற்கவேண்டும் அல்லது கற்றுக் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே ஒருவர், காலையில் அல்லது மாலையில் பள்ளிவாசலுக்கு வந்து, பிறகு தன் வீட்டுக்குச் சென்றால், அவர் (இறைவழியில் போரிட்டு வெற்றி பெற்று) போர்ச்செல்வங்களுடன் திரும்பி வரும் போராளியைப் போன்றவர் ஆவார் என்று அபூபக்ர் பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: ஸுமைய் (ரஹ்)