🔗

முஅத்தா மாலிக்: 445

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«أَلَا أُخْبِرُكُمْ بِمَا يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا، وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ؟ إِسْبَاغُ الْوُضُوءِ عِنْدَ الْمَكَارِهِ، وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ، وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ. فَذَلِكُمُ الرِّبَاطُ، فَذَلِكُمُ الرِّبَاطُ، فَذَلِكُمُ الرِّبَاطُ»


445. அல்லாஹ் தவறுகளை மன்னித்து, அந்தஸ்தை உயர்த்துகின்ற காரியங்களை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? (அவைகள்) கஷ்டமான நேரத்தில் முழுமையாக ஒளுச் செய்வது, பள்ளியின் பக்கம் அதிமாக நடந்து வருவது, தொழுகைக்குப் பின் மறுதொழுகையை எதிர்பார்ப்பது என்று கூறி விட்டு,இது தான் மாபெரும் போராட்டம் என மும்முறை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது முஸ்லிம், திர்மிதி, இப்னு மாஜா, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).