يَتَعَاقَبُونَ فِيكُمْ مَلَائِكَةٌ بِاللَّيْلِ وَمَلَائِكَةٌ بِالنَّهَارِ. وَيَجْتَمِعُونَ فِي صَلَاةِ الْعَصْرِ، وَصَلَاةِ الْفَجْرِ، ثُمَّ يَعْرُجُ الَّذِينَ بَاتُوا فِيكُمْ، فَيَسْأَلُهُمْ وَهُوَ أَعْلَمُ بِهِمْ: «كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي؟» فَيَقُولُونَ: تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ، وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ
472. இரவின் மலக்குகளும், பகலின் மலக்குகளும் உங்களிடையே மாறி, மாறி வருவார்கள். அவர்கள் அஸர் தொழுகையிலும், பஜ்ர் தொழுகையிலும் ஒன்று சேர்வார்கள். பின்பு உங்களுடன் இரவுத் தங்கியிருப்பவர்கள் உயர்வார்கள். அவர்களிடம் அவர்களை நன்கறிந்தவனான அல்லாஹ், ”என் அடியார்களை எப்படி விட்டு வந்தீர்கள் என்று கேட்பான். அதற்கு அவர்கள், அவர்கள் தொழும் நிலையிலேயே விட்டு விட்டு வந்தோம். அவாகள் தொழும் நிலையிலேயே அவர்களிடம் சென்றோம் என பதில் கூறுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.