🔗

முஅத்தா மாலிக்: 494

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ سَأَلَ أَبَا وَاقِدٍ اللَّيْثِيَّ، مَا كَانَ يَقْرَأُ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْأَضْحَى وَالْفِطْرِ؟ فَقَالَ: كَانَ «يَقْرَأُ بِق وَالْقُرْآنِ الْمَجِيدِ، وَاقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ»


பாடம் 114

பெருநாள் தொழுகையில் தக்பீர் கூறுதல், கிராஅத் ஓதுதல்

494. நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் நபி(ஸல்) அவர்கள் எந்த அத்தியாயத்தை ஓதினார்கள் என அபூவாகித் லைஸி(ரலி) அவாகளிடம் உமர்(ரலி) அவர்கள் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 50 வது அத்தியாயத்தையும், 54 வது அத்தியாயத்தையும் ஓதுவார்கள் என பதில் கூறினார்கள். இதை உபைதுல்லாஹ் இப்னு அப்துல்லா கூறுகின்றார்கள்.

(முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா வில் அபூவாகித்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் இடம் பெற்றுள்ளது).