«خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمُصَلَّى. فَاسْتَسْقَى، وَحَوَّلَ رِدَاءَهُ حِينَ اسْتَقْبَلَ الْقِبْلَةَ»
பாடம் 121
மழைத் தொழுகை முறை
511. (திறந்த வெளியில் உள்ள) தொழுமிடத்திற்கு நபி(ஸல்) அவர்கள் வந்து மழைத் தொழுகை நடத்தினார்கள். பின்பு (கிப்லாவை) முன்னோக்கியவர்களாக தன் மேலாடையை புரட்டி விட்டுக் கொண்டார்கள் என்று அப்துல்லா இப்னு ஸைத்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.