أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ فِي قَوْمٍ وَهُمْ يَقْرَءُونَ الْقُرْآنَ فَذَهَبَ لِحَاجَتِهِ، ثُمَّ رَجَعَ وَهُوَ يَقْرَأُ الْقُرْآنَ. فَقَالَ لَهُ رَجُلٌ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، أَتَقْرَأُ الْقُرْآنَ وَلَسْتَ عَلَى وُضُوءٍ؟ فَقَالَ لَهُ عُمَرُ: «مَنْ أَفْتَاكَ بِهَذَا أَمُسَيْلِمَةُ»
பாடம் 131
ஒளுவின்றி குர்ஆன் ஓதுவதற்குரிய அனுமதி
537. குர்ஆனை ஓதக் கூடிய கூட்டத்தினருடன் உமர்(ரலி) அவர்கள் இருந்தார்கள். மல ஜலம் கழிக்கச் சென்று விட்டு, குர்ஆனை ஓதியவாறே திரும்பி வந்தார்கள். அப்போது ஒருவர், ‘தலைவரே! ஒளுவின்றி குர்ஆனை ஓதுகின்றீர்களே!’ எனக் கூறினார். இது விஷயமாக (கூடாது என்று) உனக்கு தீர்ப்பு வழங்கியவன் யார்? முஸைலமாவா? என்று உமர்(ரலி) அவர்கள் கேட்டார்கள். இதை முஹம்மது இப்னு சிரின் கூறுகின்றார்கள்.