أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ كَانَ يَتَوَسَّدُ الْقُبُورَ، وَيَضْطَجِعُ عَلَيْهَا.
627. அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்கள், கப்ரை தலையணையாக ஆக்கிக் கொண்டு அதில் ஒருக்களித்து படுத்துக் கொள்பவராக இருந்தார் என்ற தகவல் எனக்கு கிடைத்தது.
அறிவிப்பவர்: மாலிக் (ரஹ்)
மாலிக் இமாம் கூறுகிறார்:
கப்ருகளின் மீது உட்காரக்கூடாது என்ற தடை விசயத்தில், நம்முடைய கருத்து என்னவெனில் “இயற்கைத் தேவையை கழிப்பதற்காக உட்காருவது’ என்பது அதன் பொருளாகும்.