🔗

முஅத்தா மாலிக்: 718

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

لاَ تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ إِلاَّ لِخَمْسَةٍ: لِغَازٍ فِي سَبِيلِ اللهِ، أَوْ لِعَامِلٍ عَلَيْهَا، أَوْ لِغَارِمٍ، أَوْ لِرَجُلٍ اشْتَرَاهَا بِمَالِهِ، أَوْ رَجُلٍ لَهُ جَارٌ مِسْكِينٌ، فَتُصُدِّقَ عَلَى الْمِسْكِينِ، فَأَهْدَى الْمِسْكِينُ لِلْغَنِيِّ.


பாடம்: 17

ஸகாத் பொருளை பெறுவது யாருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது?

718. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐந்து நபர்களைத் தவிர வேறு எந்த செல்வந்தருக்கும் ஸகாத் பொருள் ஆகுமானதல்ல. (அவர்கள் யாரென்றால்)

1 . அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்.
2 . ஸகாத்தை வசூலிக்கும் பணியாளர்.
3 . கடன்பட்டவர்.
4 . தனது செல்வத்தைக் கொடுத்து ஸகாத் பொருளை விலைக்கு வாங்கிக்கொண்டவர்.
5 . ஏழையான அண்டைவீட்டார் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸகாத் பொருளை அந்த ஏழையிடமிருந்து அன்பளிப்பாக பெற்ற செல்வந்தர்.

அறிவிப்பவர்: அதாஉ பின் யஸார் (ரஹ்)