🔗

முஅத்தா மாலிக்: 82

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

رَأَيْتُ أَنَسَ بْنَ مالِكٍ أَتَى قُبَا فَبَالَ. ثُمَّ «أُتِيَ بِوَضُوءٍ فَتَوَضَّأَ، فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ، وَمَسَحَ بِرَأْسِهِ. وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ. ثُمَّ جَاءَ الْمَسْجِدَ فَصَلَّى»


82. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் ‘குபா” என்ற இடத்திற்கு வந்து சிறுநீர் கழித்தார்கள். பின்பு தண்ணீர் தரப்பட்டது. ஒளுச் செய்தார்கள். (அதாவது முகத்தையும், முழங்கை உட்பட கைகளையும் கழுவினார்கள். தன் தலைக்கு மஸஹ் செய்தார்கள். காலுறைகள் மீதும் மஸஹ் செய்தார்கள். பின்பு பள்ளிக்கு வந்து அவர்கள் தொழ வைத்ததைப் பார்த்ததாக ஸயீத் இப்னு அப்துர் ரஹ்மான் இப்னு ருகைஹ் அல் அஷ்அரி அவர்கள் கூறுகின்றார்கள்.