🔗

முஅத்தா மாலிக்: 84

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

قَالَ: وَسُئِلَ مَالكٌ عَن رَجُلٍ تَوَضَّأَ وَعَلَيْهِ خُفَّاهُ، فَسَهَا عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ، حَتَّى جَفَّ وَضُوءُهُ وَصَلَّى، قَالَ: لِيَمْسَحْ عَلَى خُفَّيْهِ، وَلْيُعِدِ الصَّلاَةَ، وَلاَ يُعِيدُ الْوُضُوءَ.


84. ஒருவர் ஒளுச் செய்கிறார். அவரிடம் காலுறைகள் உள்ளது. அந்த காலுறைகள் மீது மஸஹ் செய்ய மறந்து விட்டார். தன் ஒளுவையும் முடித்து விட்டு தொழுதும் விடுகிறார். (இவர் என்ன செய்வது?) என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”அவர் தன் காலுறை மீது மஸஹ் செய்யட்டும். தொழுகையை மீண்டும் தொழட்டும்! ”ஒளு மீண்டும் செய்ய வேண்டியதில்லை”” என பதில் கூறினார்கள்.