«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ، فَلَا يَغْمِسْ يَدَهُ فِي وَضُوئِهِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثًا، فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ»
بسم الله الرحمن الرحيم
அளவிலா அருளாளன், நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அத்தியாயம்: 1
தூய்மை.
பாடம்: 1
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும்போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 5:6) என்று துவங்கும் வசனத்தின் விளக்கம்.
1 . நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் தமது கையை மூன்று முறை கழுவாமல் உளூ தண்ணீரின் பாத்திரத்திற்குள் இட வேண்டாம். ஏனெனில், இரவில் அவரது கை எங்கே இருந்தது என்பதை அவர் அறியமாட்டார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)