«إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُؤْمِنُ فَتَمَضْمَضَ خَرَجَتِ الْخَطَايَا مِنْ فِيهِ، فَإِذَا اسْتَنْثَرَ خَرَجَتِ الْخَطَايَا مِنْ أَنْفِهِ، فَإِذَا غَسَلَ وَجْهَهُ خَرَجْتِ الْخَطَايَا مِنْ وَجْهِهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَشْفَارِ عَيْنَيْهِ، فَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ يَدَيْهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِ يَدَيْهِ، فَإِذَا مَسَحَ بِرَأْسِهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ رَأْسِهِ حَتَّى تَخْرُجَ مِنْ أُذُنَيْهِ، فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ رِجْلَيْهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِ رِجْلَيْهِ، ثُمَّ كَانَ مَشْيُهُ إِلَى الْمَسْجِدِ وَصَلَاتُهُ نَافِلَةً لَهُ»
قَالَ قُتَيْبَةُ: عَنِ الصُّنَابِحِيِّ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
103. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஓர் இறைநம்பிக்கையுள்ள அடியான் அங்கத் தூய்மை (உளூ) செய்யும்போது, அவன் வாயை (தண்ணீரால்) கொப்பளித்தால் அவனது வாயிலிருந்து பாவங்கள் வெளியேறிவிடுகின்றன. அவன் (மூக்கிற்குத்) தண்ணீர் உறிஞ்சி வெளியேற்றினால் அவனது மூக்கிலிருந்து பாவங்கள் வெளியேறிவிடுகின்றன. அவன் தன் முகத்தைக் கழுவினால் அவனது முகத்திலிருந்து பாவங்கள் வெளியேறிவிடுகின்றன. அவனது கண்களின் இமைகளுக்குக் கீழிருந்தும் பாவங்கள் வெளியேறிவிடுகின்றன. அவன் தன் இரு கரங்களையும் கழுவினால் அவனது கைகளிலிருந்து பாவங்கள் வெளியேறிவிடுகின்றன. அவனது நகங்களுக்குக் கீழிருந்தும் பாவங்கள் வெளியேறிவிடுகின்றன. அவன் தன் தலையை ‘மஸஹ்’ செய்தால் அவனது தலையிலிருந்து பாவங்கள் வெளியேறிவிடுகின்றன. அவனது காதுகளிலிருந்தும் பாவங்கள் வெளியேறிவிடுகின்றன. அவன் தன் இரு பாதங்களையும் கழுவினால் அவனது பாதங்களிலிருந்தும் பாவங்கள் வெளியேறிவிடுகின்றன. அவனது கால் நகங்களுக்குக் கீழிருந்தும் பாவங்கள் வெளியேறிவிடுகின்றன. பிறகு அவன் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவது அவனுக்கு (நஃபிலான) மேலதிக வணக்கமாகிவிடுகிறது…