سَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَدْعُو فِي صَلَاتِهِ لَمْ يُمَجِّدِ اللَّهَ، وَلَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَجِلْتَ أَيُّهَا الْمُصَلِّي»، ثُمَّ عَلَّمَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يُصَلِّي، فَمَجَّدَ اللَّهَ وَحَمِدَهُ، وَصَلَّى عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ادْعُ تُجَبْ، وَسَلْ تُعْطَ»
பாடம்:
தொழுகையில் அல்லாஹ்வை (புகழ்ந்து) கண்ணியப்படுத்துவதும், நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்வதும்.
1284. ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வை (புகழ்ந்து) கண்ணியப்படுத்தாமலும், நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்று, தொழுகையாளியே! நீ அவசரப்பட்டு விட்டாய் என்று கூறி அம்மனிதருக்கு அல்லாஹ்வை புகழ்வது பற்றியும், நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்வது பற்றியும் கற்றுக் கொடுத்தார்கள்.
பின்பு அந்த மனிதர் தொழுகையில் அல்லாஹ்வை புகழ்ந்து, நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொன்னபோது, (இப்போது) பிரார்த்தனை செய்! பதிலளிக்கப்படும். கேள்! கொடுக்கப்படும்” என்று அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஃபளாலா பின் உபைத் (ரலி)