🔗

நஸாயி: 1304

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي صَلَاتِهِ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الْأَمْرِ، وَالْعَزِيمَةَ عَلَى الرُّشْدِ، وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ، وَحُسْنَ عِبَادَتِكَ، وَأَسْأَلُكَ قَلْبًا سَلِيمًا، وَلِسَانًا صَادِقًا، وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ


1304.

இறைவா நேர்வழியில் உறுதியையும் திடமான நிலைபாட்டையும் உன்னிடம் வேண்டுகிறேன். உனது அருட்கொடைக்கு நன்றிசெலுத்துவதையும் அழகான முறையில் உன்னை வணங்குவதையும் வேண்டுகிறேன். நல்ல உள்ளத்தையும் உண்மை பேசும் நாவையும் வேண்டுகிறேன். நீ அறிந்துவைத்துள்ள நன்மையை வேண்டுகிறேன். நீ அறிந்து வைத்துள்ள தீமையை விட்டுப் பாதுகாவல் தேடுகிறேன். நீ அறிந்து வைத்துள்ள (என்) பாவங்களை மன்னிக்க வேண்டுகிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)