كَانَ أَبِي يَقُولُ فِي دُبُرِ الصَّلَاةِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ، وَعَذَابِ الْقَبْرِ»، فَكُنْتُ أَقُولُهُنَّ، فَقَالَ أَبِي: أَيْ بُنَيَّ، عَمَّنْ أَخَذْتَ هَذَا؟ قُلْتُ عَنْكَ، قَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُهُنَّ فِي دُبُرِ الصَّلَاةِ»
பாடம்:
தொழுகைக்குப் பின் (அல்லாஹ்விடம்) பாதுகாவல் தேடுதல்.
1347. முஸ்லிம் பின் அபூபக்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எனது தந்தை அபூபக்ரா (ரலி) அவர்கள் தொழுகைக்குப் பின்,
“அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் குஃப்ரி, வல்ஃபக்ரி, வ அதாபில் கப்ரி”
(பொருள்: அல்லாஹ்வே! இறைநிராகரிப்பு, வறுமை, கப்ரின் வேதனை ஆகியவற்றை விட்டு உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்)
என்ற துஆவை ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள். (நானும் அதை மனனமிட்டு ஓத ஆரம்பித்தேன்.) நான் ஓதுவதைக் கேட்ட எனது தந்தை, மகனே! இதை நீ யாரிடமிருந்து கற்றுக் கொண்டாய்! என்று கேட்டார்கள். அதற்கு நான், “உங்களிடமிருந்து தான்” என்று கூறினேன். அதற்கவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின் இதை ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று கூறினார்கள்.