أُمِرُوا أَنْ يُسَبِّحُوا دُبُرَ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَيَحْمَدُوا ثَلَاثًا وَثَلَاثِينَ، وَيُكَبِّرُوا أَرْبَعًا وَثَلَاثِينَ، فَأُتِيَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ فِي مَنَامِهِ، فَقِيلَ لَهُ: أَمَرَكُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُسَبِّحُوا دُبُرَ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَتَحْمَدُوا ثَلَاثًا وَثَلَاثِينَ، وَتُكَبِّرُوا أَرْبَعًا وَثَلَاثِينَ؟ قَالَ: نَعَمْ، قَالَ: فَاجْعَلُوهَا خَمْسًا وَعِشْرِينَ، وَاجْعَلُوا فِيهَا التَّهْلِيلَ، فَلَمَّا أَصْبَحَ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ: «اجْعَلُوهَا كَذَلِكَ»
1350. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் முப்பத்தி மூன்று முறை ‘ஸுப்ஹானல்லாஹ்’, முப்பத்தி மூன்று முறை ‘அல்ஹம்து லில்லாஹ்’, முப்பத்தி நான்கு முறை ‘அல்லாஹு அக்பர்’ என்று துதி செய்யுமாறு (மக்களுக்குக்) கட்டளையிடப்பட்டிருந்தது.
அப்போது அன்ஸாரிகளில் ஒருவருடைய கனவில் ஒருவர் வந்து, ‘ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் முப்பத்தி மூன்று முறை ஸுப்ஹானல்லாஹ், முப்பத்தி மூன்று முறை அல்ஹம்து லில்லாஹ், முப்பத்தி நான்கு முறை அல்லாஹு அக்பர் என்று சொல்லுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்களா?’ என்று கேட்டார். அதற்கு அவர் ‘ஆம்’ என்றார்.
அதற்கவர், ‘அவற்றை இருபத்தி ஐந்து முறைகளாக ஆக்கிக் கொள்ளுங்கள்; அவற்றுடன் (இருபத்தி ஐந்து முறை) தஹ்லீலையும் (அதாவது லா இலாஹ இல்லல்லாஹ் என்பதையும்) சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்.
அதிகாலையானதும் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து விபரத்தைக் கூறவே, ‘அப்படியே செய்யுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.