🔗

நஸாயி: 1685

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

أَنَّهُ كَانَ فِي مَسْجِدِ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ، فَأُقِيمَتِ الصَّلَاةُ فَجَعَلُوا يَنْتَظِرُونَهُ فَجَاءَ، فَقَالَ: إِنِّي كُنْتُ أُوتِرُ، قَالَ: وَسُئِلَ عَبْدُ اللَّهِ، هَلْ بَعْدَ الْأَذَانِ وِتْرٌ؟ قَالَ: نَعَمْ، وَبَعْدَ الْإِقَامَةِ، وَحَدَّثَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ «نَامَ عَنِ الصَّلَاةِ حَتَّى طَلَعَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى»


1685. (எனது தந்தை) முஹம்மது பின் முன்தஷிர் அவர்கள், அம்ர் பின் ஷர்ஹபீல் என்ற பள்ளியில் இருந்தார். தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. தாமதமாக வந்த முஹம்மது பின் முன்தஷிர் “நான் வித்ரு தொழுது கொண்டிருந்தேன்” என்று சொன்னார். (இது குறித்து) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “பாங்குக்குப் பின் வித்ரு தொழுவது கூடுமா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “ஆம்! இகாமத்துக்குப் பின்னரும் தொழலாம். நபி (ஸல்) அவர்கள் (வித்ரு தொழாமல்) உறங்கி விட்டால் சூரியன் உதயமான பின்னரும் தொழுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்ராஹீம் பின் முஹம்மத் (ரஹ்)