🔗

நஸாயி: 1730

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ»،

خَالَفَهُمَا حُصَيْنٌ، فَرَوَاهُ عَنْ ذَرٍّ، عَنْ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


1730.

நபி (ஸல்) அவர்கள் (மூன்று ரக்அத்) வித்ர்-ஒற்றைப்படைத் தொழுகையில் (முதல் ரக்அத்தில்) ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா என்ற திருக்குர்ஆனின் 87 வது அத்தியாயத்தையும், (இரண்டாவது ரக்அத்தில்) குல் யாஅய்யுஹல் காஃபிரூன் என்ற 109 வது அத்தியாயத்தையும், (மூன்றாவது  ரக்அத்தில்) குல் ஹுவல்லாஹு அஹத் என்ற 112 வது அத்தியாயத்தையும் ஓதுபவர்களாக இருந்தார்கள்.

ஸலாம் கொடுத்து முடித்ததும் “ஸுப்ஹானல் மலிக்குல் குத்தூஸ்” என்று மூன்று முறை சொல்வார்கள்.

அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி)