كُنْتُ فِي بَيْتٍ فِيهِ عُتْبَةُ بْنُ فَرْقَدٍ، فَأَرَدْتُ أَنْ أُحَدِّثَ بِحَدِيثٍ، وَكَانَ رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَأَنَّهُ أَوْلَى بِالْحَدِيثِ مِنِّي، فَحَدَّثَ الرَّجُلُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” فِي رَمَضَانَ، تُفْتَحُ فِيهِ أَبْوَابُ السَّمَاءِ، وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ النَّارِ، وَيُصَفَّدُ فِيهِ كُلُّ شَيْطَانٍ مَرِيدٍ، وَيُنَادِي مُنَادٍ كُلَّ لَيْلَةٍ: يَا طَالِبَ الْخَيْرِ هَلُمَّ، وَيَا طَالِبَ الشَّرِّ أَمْسِكْ
2108. அர்ஃபஜா பின் அப்துல்லாஹ் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஒரு வீட்டில் இருந்தேன். அங்கு உத்பா பின் ஃபர்கத் (ரலி) அவர்களும் இருந்தார்கள். நான் ஒரு ஹதீஸ் சொல்ல விரும்பினேன். ஆனால் அங்கு நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் (வேறு) ஒருவரும் இருந்தார். அவர் ஹதீஸ் சொல்வதற்கு என்னை விட மிகவும் தகுதியானவர் போல் தோன்றியது.
(அவரிடம், உத்பா பின் ஃபர்கத் (ரலி) அவர்கள், “ரமளான் மாதம் குறித்து நீங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட ஹதீஸை எங்களுக்கு கூறுங்கள்” என்று கேட்க) அவர் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதத்தில், வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன; மேலும் ஒவ்வொரு கெட்ட ஷைத்தானும் விலங்கிடப்படுகிறான்.
மேலும் (வானவர்களில்) ஒரு அழைப்பாளர், “நன்மையை தேடுவோரே! வாருங்கள். தீமையை தேடுவோரே! (அதை) தவிர்த்து விடுங்கள்” என்று ஒவ்வொரு இரவிலும் அழைக்கிறார்.