🔗

நஸாயி: 2417

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَصُومُ تِسْعًا مِنْ ذِي الْحِجَّةِ، وَيَوْمَ عَاشُورَاءَ، وَثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، أَوَّلَ اثْنَيْنِ مِنَ الشَّهْرِ وَخَمِيسَيْنِ»


2417.

ஹுனைதா பின் காலித் (ரலி) அவர்களின் மனைவி கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், துல்ஹஜ் மாதம் (முதல்) ஒன்பது நாள்களும், ஆஷூரா (நாளான முஹர்ரம் மாதம் 10ஆம்) நாளன்றும், மாதத்தின் முதல் திங்கட் கிழமை, (இரண்டு) வியாழக் கிழமை ஆகிய மூன்று நாள்களும் நோன்பு நோற்றுவந்தார்கள்” என நபி (ஸல்) அவர்களின் மனைவியர்களுள் ஒருவர் அறிவித்தார்கள்.