🔗

நஸாயி: 2922

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«الطَّوَافُ بِالْبَيْتِ صَلَاةٌ، فَأَقِلُّوا مِنَ الْكَلَامِ»


பாடம்:

இறையில்லமான கஅபாவைச் சுற்றி (தவாஃப் செய்து) வரும்போது பேசுவதற்கு அனுமதி.

2922. “(இறையில்லமான) கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவது தொழுகையாகும். எனவே (அப்போது) பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்களைச் சந்தித்த ஒருவர் கூறினார்.

அறிவிப்பவர்: தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)

நஸாயீ இமாம் கூறுகிறார்:

மேற்கண்ட செய்தியின் வாசக அமைப்பு யூஸுஃப் பின் ஸயீத் அவர்கள் அறிவித்தவையாகும். என்றாலும் ஹன்ளலா பின் அபூஸுஃப்யான் இதற்கு மாற்றமாக வேறு அமைப்பில் அறிவித்துள்ளார்.