🔗

நஸாயி: 3016

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

شَهِدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَاهُ نَاسٌ، فَسَأَلُوهُ عَنِ الْحَجِّ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْحَجُّ عَرَفَةُ، فَمَنْ أَدْرَكَ لَيْلَةَ عَرَفَةَ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ مِنْ لَيْلَةِ جَمْعٍ، فَقَدْ تَمَّ حَجُّهُ»


3016. நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது, மக்களில் சிலர் வந்து ஹஜ்ஜைப் பற்றி அவரிடம் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஹஜ் என்பதே அரஃபா தான். யார் ‘ஜம்உ’ இரவின் ஃபஜ்ரு (அதாவது முஸ்தலிஃபாவின் ஃபஜ்ரு) உதயமாகும் முன் அரஃபாவின் இரவை அடைந்துவிடுகிறாரோ, அவருடைய ஹஜ் நிறைவடைந்துவிட்டது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் யஃமர் (ரலி)