«وَعَدَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوَةَ الْهِنْدِ، فَإِنْ أَدْرَكْتُهَا أُنْفِقْ فِيهَا نَفْسِي وَمَالِي، فَإِنْ أُقْتَلْ كُنْتُ مِنْ أَفْضَلِ الشُّهَدَاءِ، وَإِنْ أَرْجِعْ فَأَنَا أَبُو هُرَيْرَةَ الْمُحَرَّرُ»
பாடம்:
இந்தியாவின் மீது போர் தொடுத்தல்.
3173. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நீங்கள்) இந்தியாவுடன் போர் செய்வீர்கள் என்று எங்களுக்கு வாக்களித்தார்கள்.
அப்போது நான், “அந்தப் போர் நிகழுமானால் என்னையும் என் பொருளையும் செலவழிப்பேன். நான் (அப்போரில்) கொல்லப்பட்டால் அறப்போராளிகளுள் சிறந்தவராக ஆகிவிடுவேன். (வெற்றி பெற்றுத்) திரும்பினால் நான் (நரகத்திலிருந்து) விடுதலைபெற்ற அபூஹுரைரா ஆவேன்” என்று எனக்குள் கூறிக்கொண்டேன்.