كَانَ عُقْبَةُ بْنُ عَامِرٍ، يَمُرُّ بِي فَيَقُولُ: يَا خَالِدُ، اخْرُجْ بِنَا نَرْمِي، فَلَمَّا كَانَ ذَاتَ يَوْمٍ أَبْطَأْتُ عَنْهُ، فَقَالَ: يَا خَالِدُ، تَعَالَ أُخْبِرْكَ بِمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَأَتَيْتُهُ، فَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ وَلَيْسَ اللَّهْوُ إِلَّا فِي ثَلَاثَةٍ: تَأْدِيبِ الرَّجُلِ فَرَسَهُ، وَمُلَاعَبَتِهِ امْرَأَتَهُ، وَرَمْيِهِ بِقَوْسِهِ، وَنَبْلِهِ، وَمَنْ تَرَكَ الرَّمْيَ بَعْدَ مَا عَلِمَهُ رَغْبَةً عَنْهُ، فَإِنَّهَا نِعْمَةٌ كَفَرَهَا ” أَوْ قَالَ: «كَفَرَ بِهَا»
பாடம்:
ஒருவர் தனது குதிரைக்குப் பயிற்சியளித்தல்.
3578. காலித் பின் யஸீத் அல்ஜுஹனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், “காலித்! நம்மோடு புறப்படுங்கள். நாம் அம்பெறி(ந்து பயிற்சி செய்)வோம்” என்று கூறினார்கள். (இவ்வாறு நாங்கள் செய்துகொண்டி ருந்தபோது) ஒரு நாள் நான் தாமதித்துவிட்டேன்.
அப்போது அவர்கள், “காலித்! வாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை உமக்குத் தெரிவிக்கிறேன்” என்று சொன்னார்கள். எனவே நான் அவர்களிடம் சென்றேன்.
அச்சமயத்தில் அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொன்னதாவது:
(திண்ணமாக அல்லாஹ் ஓர் அம்பின் மூலம் மூன்று பேரைச் சொர்க்கத்தில் நுழையச் செய்கிறான்:
1 . செய்கின்றபோது நன்மையை நாடி அதைச் செய்பவர்.
2 . அதை எறிபவர்.
3 . அம்பெறிவதற்காக (மீண்டும் பயன்படுத்த எடுத்துக் கொடுத்தோ பொருளாதார ரீதியாகவோ) உதவி செய்பவர்.
(எனவே) அம்பெறி(ந்து பயிற்சி செய்)யுங்கள். (குதிரை) சவாரி செய்யுங்கள். நீங்கள் (குதிரை) சவாரி செய்வதைவிட அம்பெறி(ந்து பயிற்சி செய்)வது எனக்கு மிகவும் விருப்பமானதாகும்.)
மூன்று விஷயங்களில் வீண் என்பது கிடையாது.
1 . ஒருவர் தனது குதிரைக்குப் பயிற்சியளிப்பது.
2 . ஒருவர் தனது மனைவியுடன் விளையாடுவது.
3 . ஒருவர் தனது வில்லால் அம்பெறிந்து பயிற்சி செய்வது.
அம்பெறியும் கலையை ஒருவர் அறிந்தபின் அதைப் புறக்கணித்து விட்டுவிட்டால் அவர் (அல்லாஹ்வின் அந்த) அருட்கொடையை மறுத்து விட்டவர் ஆவார்.