«لَا تَصْلُحُ الْعُمْرَى وَلَا الرُّقْبَى، فَمَنْ أَعْمَرَ شَيْئًا أَوْ أَرْقَبَهُ، فَإِنَّهُ لِمَنْ أُعْمِرَهُ وَأُرْقِبَهُ حَيَاتَهُ وَمَوْتَهُ»
أَرْسَلَهُ حَنْظَلَةُ
3713. உம்ரா, ருக்பா என்ற ஆயுட்கால அன்பளிப்பு செய்வது நல்லதல்ல. அவ்வாறு ஒருவருக்கு ஆயுட்கால அன்பளிப்பு செய்யப்பட்டால் அவர் உயிரோடு இருந்தாலும், இறந்தாலும் அது அவருக்கே சொந்தமானதாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்.
அறிவிப்பவர்: தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)