🔗

நஸாயி: 3773

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ يَهُودِيًّا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّكُمْ تُنَدِّدُونَ، وَإِنَّكُمْ تُشْرِكُونَ تَقُولُونَ: مَا شَاءَ اللَّهُ وَشِئْتَ، وَتَقُولُونَ: وَالْكَعْبَةِ، ” فَأَمَرَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادُوا أَنْ يَحْلِفُوا أَنْ يَقُولُوا: وَرَبِّ الْكَعْبَةِ، وَيَقُولُونَ: مَا شَاءَ اللَّهُ، ثُمَّ شِئْتَ


பாடம்:

கஅபாவின் மீது சத்தியம் செய்தல்.

3773. ஜுஹைனா குலத்தைச் சார்ந்த குதைலா என்ற பெண்மணியிடமிருந்து அப்துல்லாஹ் பின் யஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

யூதர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, திண்ணமாக நீங்கள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றீர்கள். நீங்கள் (அல்லாஹ்வுக்கு) இணையாக்குகின்றீர்கள். “(ஏனெனில்) நீங்கள், “மாஷா அல்லாஹு, வ ஷிஃத்த (அல்லாஹ் நாடியதும் நீ நாடியதும்) என்று சொல்கின்றீர்கள். “வல்கஅபத்தி” (கஅபாவின் மீது சத்தியமாக) என்று கூறுகின்றீர்கள்” எனச் சொன்னார்.

ஆகவே (அவர் இவ்வாறு சொல்லிவிட்டதால்) நபி (ஸல்) அவர்கள், (இனி என் தோழர்களாகிய) அவர்கள் சத்தியம் செய்தால், “வ ரப்பில் கஅபத்தி” (கஅபாவின் இறைவன்மீது சத்தியமாக) என்றும், “மாஷா அல்லாஹ், ஸும்ம ஷிஃத” (அல்லாஹ் நாடினான், பிறகு இன்னார் நாடினார்) என்றும் கூறவேண்டும் எனக் கட்டளையிட்டார்கள்.