رَكِبَتِ امْرَأَةٌ الْبَحْرَ فَنَذَرَتْ أَنْ تَصُومَ شَهْرًا فَمَاتَتْ قَبْلَ أَنْ تَصُومَ، فَأَتَتْ أُخْتُهَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَكَرَتْ ذَلِكَ لَهُ، «فَأَمَرَهَا أَنْ تَصُومَ عَنْهَا»
பாடம் :
ஒருவர் நோன்பு வைப்பதாக நேர்ச்சை செய்து வைக்காமல் இறந்துவிட்டால்…?
3816. ஒரு பெண் கடல் பயணம் சென்றார். அப்போது அவர் ஒரு மாதம் நோன்பு வைப்பதாக நேர்ச்சை செய்துக்கொண்டார். அந்த நோன்புகளை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவரின் சகோதரி நபி (ஸல்) அவர்களிடம் வந்து இது குறித்து விளக்கம் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டவரின் சார்பாக நோன்புவைக்குமாறு அவருக்கு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)