🔗

நஸாயி: 4224

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

بَيْنَا نَحْنُ وُقُوفٌ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَةَ فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ عَلَى أَهْلِ بَيْتٍ فِي كُلِّ عَامٍ أَضْحَاةً، وَعَتِيرَةً»

قَالَ مُعَاذٌ: «كَانَ ابْنُ عَوْنٍ يَعْتِرُ أَبْصَرَتْهُ عَيْنِي فِي رَجَبٍ»


4224. மிக்னஃப் பின் ஸுலைம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அரஃபாவில் நபி (ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தபோது, நபி (ஸல்) அவர்கள், “மக்களே! ஒவ்வோர் ஆண்டும் உள்ஹிய்யாவும், ரஜப் மாதத்தின் முதல் பத்து நாள்களில் பிராணிகளை அறுத்துப் பலியிடுவதும் ஒவ்வொரு குடும்பத்தார் மீதும் கடமையாகும்” என்று கூறினார்கள்.

முஆத் பின் முஆத் பின் நஸ்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அவ்ன் (ரஹ்) அவர்கள், (ரஜப் மாதத்தில்) பிராணிகளை அறுத்துப் பலியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இவ்வாறு ரஜப் மாதத்தில் செய்ததை என் கண் பார்த்துள்ளது.