«مَا مِنْ إِنْسَانٍ قَتَلَ عُصْفُورًا فَمَا فَوْقَهَا بِغَيْرِ حَقِّهَا، إِلَّا سَأَلَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَنْهَا»، قِيلَ يَا رَسُولَ اللَّهِ، وَمَا حَقُّهَا؟ قَالَ: «يَذْبَحُهَا فَيَأْكُلُهَا، وَلَا يَقْطَعُ رَأْسَهَا يَرْمِي بِهَا»
பாடம்:
சிட்டுக்குருவிகளை உண்ண அனுமதி.
4349. “எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் சிட்டுக்குருவிகளையோ அதைவிடப் பெரிய பறவைகளையோ நியாயமான முறையில் இல்லாமல் கொன்றால், அவனை அதுபற்றி மகத்துவமும் மாண்பும்கொண்ட அல்லாஹ் விசாரிக்காமல் விடமாட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! அதனுடைய நியாயமான முறை என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவற்றை அறுத்து அவன் உண்பது (நியாயமான முறையாகும்); (வீணாகப் பிடித்து) அவற்றின் தலையை முறித்து வீசிவிடுவது (நியாயமற்ற முறையாகும்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)