عَشْرَةً مِنَ الْفِطْرَةِ: السِّوَاكَ، وَقَصَّ الشَّارِبِ، وَتَقْلِيمَ الْأَظْفَارِ، وَغَسْلَ الْبَرَاجِمِ، وَحَلْقَ الْعَانَةِ، وَالِاسْتِنْشَاقَ، وَأَنَا شَكَكْتُ فِي الْمَضْمَضَةِ
5041. ஸுலைமான் அத்தைமீ (ரஹ்) கூறியதாவது:
பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில் அடங்கும். (அவையாவன:) பல் துலக்குவது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது, நாசிக்கு நீர் செலுத்துவது போன்றவையாகும். மேலும் வாய்கொப்புளித்தல் இதில் அடங்குமா? என எனக்கு சந்தேகமாக உள்ளது என தல்க் பின் ஹபீப் (ரஹ்) கூறினார்.