خَمْسٌ مِنَ الْفِطْرَةِ: الْخِتَانُ، وَحَلْقُ الْعَانَةِ، وَنَتْفُ الضَّبْعِ، وَتَقْلِيمُ الظُّفْرِ، وَتَقْصِيرُ الشَّارِبِ
«وَقَفَهُ مَالِكٌ»
5043. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இமாம் மாலிக் அவர்கள் இந்த செய்தியை அபூஹுரைரா (ரலி) அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளார்.