«يَا رُوَيْفِعُ، لَعَلَّ الْحَيَاةَ سَتَطُولُ بِكَ بَعْدِي، فَأَخْبِرِ النَّاسَ أَنَّهُ مَنْ عَقَدَ لِحْيَتَهُ، أَوْ تَقَلَّدَ وَتَرًا، أَوْ اسْتَنْجَى بِرَجِيعِ دَابَّةٍ أَوْ عَظْمٍ، فَإِنَّ مُحَمَّدًا بَرِيءٌ مِنْهُ»
பாடம்:
தாடியில் முடிச்சுப் போடுவது.
5067. ருவைஃபிஉ பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ருவைபிஃஉவே! எனக்கு பின் உன் வாழ்நாள் நீடிக்கலாம்! அப்போது நீர் மக்களிடம், “யார் தனது தாடிக்கு முடிச்சுப் போட்டு கொள்கின்றாரோ அல்லது யார் கயிற்றை கழுத்தில் (தாயத் போன்று) மாலையாக போட்டுக் கொள்கிறாரோ அல்லது யார் மிருகங்களின் விட்டை அல்லது எலும்பைக் கொண்டு (மலம் கழித்தப் பின்) சுத்தம் செய்கின்றாரோ நிச்சயமாக அவரிடமிருந்து முஹம்மத் (ஸல்) அவர்கள் விலகி விட்டார்கள் என்று அறிவித்துவிடுக! என்று கூறினார்கள்.